பல்லவி
நாரத3 முனி வெட3லின
ஸு-கு3ணாதிஸ1யமு வினரே
அனுபல்லவி
ஸாரெகு ஸ்ரீ ஹரி பத3 ஸாரஸமுல
த்4யானிஞ்சுசு நாராயண நாமமுலனு
பாராயணமொனரிஞ்சுசு (நா)
சரணம்
சரணம் 1
1பே4தா3பே4த3 ரஹிதமகு3 வேதா3ந்த
ரஸ ப4ரிதுடா3ஹ்லாத3மு மீரக3னு
2ப்ரஹ்லாது3னிகி ஸு1ப4மு தெலுபனு (நா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாரத3/ முனி/ வெட3லின/
நாரத/ முனிவர்/ எழுந்தருளிய/
ஸு-கு3ண-அதிஸ1யமு/ வினரே/
பெருஞ்சிறப்பினை/ கேளீரே/
அனுபல்லவி
ஸாரெகு/ ஸ்ரீ ஹரி/ பத3/ ஸாரஸமுல/
எவ்வமயமும்/ ஸ்ரீ ஹரியின்/ திருவடி/ தாமரைகளை/
த்4யானிஞ்சுசு/ நாராயண/ நாமமுலனு/
தியானித்துக் கொண்டு/ நாராயணனின்/ நாமங்களினை/
பாராயணமு/-ஒனரிஞ்சுசு/ (நா)
பாராயணம்/ செய்துகொண்டு/ நாரத...
சரணம்
சரணம் 1
பே4த3/-அபே4த3/ ரஹிதமகு3/ வேதா3ந்த/
பேத/ அபேதங்கள்/ அற்ற/ வேதாந்த/
ரஸ/ ப4ரிதுடு3-/ஆஹ்லாத3மு/ மீரக3னு/
சாரம்/ நிறைந்தோன்/ களிப்பு/ மிக/
ப்ரஹ்லாது3னிகி/ ஸு1ப4மு/ தெலுபனு/ (நா)
பிரகலாதனுக்கு/ நற்செய்தி/ தெரிவிக்க/ நாரத...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம் 'காமவர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
2 - ப்ரஹ்லாது3னிகி - ப்ரஹ்லாது3னகு.
Top
மேற்கோள்கள்
1 - பே4த - மத்வாசாரியரின் கோட்பாடாகிய 'துவைதம்', பேத வாதம் எனப்படும். பேத வாதமும், மத்வாசாரியாரும்.
1 - அபே4த - அத்துவைதம்.
1 - பேத-அபே4த - துவைத-அத்துவைதம்
ஆதி சங்கரர் இயற்றிய, 'ஷட்பதீ' தோத்திரத்தில் 'பேத-அபேத' கொள்கையின் சாயல் தெரிகின்றது -
"தலைவா! (நமக்குள்) வேறுபாடுகள் மறைந்தாலும், நான் உன்னவனாவேனே யொழிய, நீ என்னவனாவதில்லை.
எங்ஙனம், அலைகள், கடலைச் சேர்ந்தவையே யன்றி, கடல், அலைகளைச் சேர்ந்தததாகாதோ, அங்ஙனமே." (3)
Top
விளக்கம்
1 - பே4தா3பே4த3 ரஹிதமகு3 வேதா3ந்த ரஸ ப4ரிதுடு3 - பேத-அபேதகங்களற்ற வேதாந்த சாரம் நிறைந்தோன் -
இரண்டாவது சரணத்தில், 'தன்னைவிட்டகலாத காதலுடன்' என்று கூறப்பட்டுள்ளது. நாரதரால் இயற்றப்பெற்ற 'நாரத பக்தி சூத்திர'ங்களில், 'பர-பக்தி' அல்லது 'முக்ய பக்தி' அல்லது 'அனுராகம்' எனப்படும், இறைவனிடம், தொண்டன் கொள்ளும் பெருங்காதலைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. என் சிற்றறிவுக்கு எட்டியவரை, 'பேத-அபேதகங்களற்ற வேதாந்தம்' என்பது, அத்தகைய 'பர-பக்தி'யினைக் குறிக்கும்.
3 - ஜயமு ஜயமு ஜயமனி - வெற்றி, வெற்றி, வெற்றி யென - மும்முறை கூறுதல் உறுதிப்படுத்துவதாகும்.
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலில், நாரதர், அரி, பிரகலாதனைக் காண வரப்போகும் நற்செய்தியினை, பிரகலாதனுக்குத் தெரிவிக்க, புறப்படுவதனை தியாகராஜர் விவரிக்கின்றார்.
Top
பாராயணம் செய்துகொண்டு - இடைவிடாது ஓதுதல்
பேதம் - பரமான்மாவும் சீவான்மாவும் வேறெனல்
அபேதம் - பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்றேயெனல்
வேதாந்த சாரம் நிறைந்தோன் - நாரதரைக் குறிக்கும்
ஒளிரும் - அரியைக் குறிக்கும்
தியாகராசனுக்கினியோன் - அரி
Top